Velupillai Priraphakaran

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2003

தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் 27.11.2003 எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். இன்றைய நாள், வணக்கத்திற்குரிய புனித நாள். இன்று, தமிழீழ தேசம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகஞ்செய்த எம்மினிய வீரர்களை எமது இதயக் கோவில்களில் நாம் நெஞ்சுருகிப் பூசிக்கும் திருநாள். அன்றைய தமிழர் இராச்சியம் வீழ்ச்சியடைந்து, பல நூறு ஆண்டுகள் […]
Read more

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2002

தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம் 27.11.2002 எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே, இன்றைய நாள் ஒரு புனித நாள்.எமது மாவீரர்களின் நினைவு நாள். எமது இனத்தின் இருப்பிற்காக, தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை, எமது நெஞ்சத்தின் நினைவாலயத்தில் நாம் நினைவு கூரும் நன்நாள். விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் […]
Read more

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2001

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2001. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே… இன்று மாவீரர் நாள். விடுதலை வேண்டிக் களமாடி வீழ்ந்த எமது வீரப் புதல்வர்களை நாம் எமது நினைவில் உயிர்ப்பித்துப் பூசிக்கும் நன் நாள். தமிழ் இனத்தின் தேசிய வாழ்வு நிலைப்பதற்காகத் தமது சொந்த வாழ்வை ஈகம்செய்த சுதந்திர வீரர்களுக்கு நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்தும் புனித நாள். விடுதலைக்காக எமது இயக்கம் கொடுத்த விலை அளப்பரியது. உலகத்தில் […]
Read more

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2000

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2000. எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே…, எமது மண்ணிற்காக விடுதலை என்ற உன்னத விழுமியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த எம் உயிர் வீரர்களை நாம் நினைவு கொள்ளும் இன்றைய நாள் ஒரு புனித நாள். இந்த நன்னாளில் ஆன்மக்கதவுகளை அப் புனிதர்களுக்காக திறந்து கொள்வோம். நீங்காத நினைவுகளாக எம்மோடு ஒன்றிக் கலந்துவிட்ட உணர்வுகளாக, காலத்தால் சாகாது என்றும் எம்முள் உயிர்வாழும் இம் […]
Read more

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1999

தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 1999. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே… இன்றைய நாள் எமது தேசத்து விடுதலை வீரர்களின் நினைவு நாள். தாயக விடுதலையை தமது உயிரிலும் மேலாக நேசித்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த எமது தேசத்தின் சுதந்திர வீரர்களை இன்று நாம் எமது இதயத்துக் கோயில்களில் சுடரேற்றிக் கௌரவிக்கிறோம். எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் […]
Read more