தலைவரின் அகவை நாளுக்கு பெருஞ்சித்திரனாரின் வாழ்த்து
‘பிரபா கரன்’ என்னும் பிள்ளை வேங்கை உரமாய்த் தமிழினம் உய்ய உயிர்தந்து திருவார் தமிழீழம் தேடப் பிறந்தான்: பெருமானத் தமிழன்! பெறலரும் வீரன்-அவன் உருவான நாளெண்ணி ஊதாயே சங்கம்! ஒங்குகவன் புகழென்றே ஒலிப்பாயே முரசம்! இந்தியப் பெரும்படைக்கு எதிர்நின்ற வெம்புலி! கொந்திய நெஞ்சாங் குலையினிை லிருந்து, அவன் சிந்திய அரத்தத்தால் சிவந்தது தமிழீழம்: பிந்திய தமிழ்மறம் பேணிப்புரந் தான்!-அவன் வந்தலர்ந்த நாள் மகிழ்ந்து பாடுகவே வாழ்த்தும் வளர்க அவன் புகழென்றே மீட்டுகவே யாழும்! மறந்த தமிழினத்தின் மறஞ்சொன்ன […]